விசா இன்மை தொடர்பில் 21 வெளிநாட்டவர்கள் கைது!

விசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 21 வெளிநாட்டவர்கள் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 19 இந்திய பிரஜைகளும் பங்களாதேஷ் பிரஜைகள் இருவரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இந்நாட்டில் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படும் நிலையில், அவர்கள் மிரிஹான தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.