நேட்டோவுக்கான பிரித்தானியாவின் அர்ப்பணிப்பு உறுதியாகவுள்ளது -பிரதமர்!!

உலகின் மிகப்பெரிய ராணுவக் கூட்டணியான நேட்டோவின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வற்ஃபேர்டில் இன்று இடம்பெறவுள்ள உச்சிமாநாட்டில் நேட்டோவுக்கான பிரித்தானியாவின் அர்ப்பணிப்பு உறுதியாகவுள்ளது என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவிக்கவுள்ளார்.


நேட்டோ அமைப்பு 29 நாடுகளையும் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்களையும் பாதுகாக்கும் ஒற்றுமையின் ஒரு பெரிய கேடயத்தை வழங்குகிறது என இன்றைய உச்சிமாநாட்டில் வழங்கவுள்ள உரையில் பிரதமர் ஜோன்சன் தெரிவிக்கவுள்ளார்.

இன்று நாம் நிம்மதியாக வாழ்கிறோம் என்பது இந்தக் கூட்டணியின் சக்தியை நிரூபிக்கிறது எனவும் நாங்கள் ஒன்றாக நிற்கும் வரை, யாரும் நம்மை தோற்கடிப்பார்கள் என்று நம்ப முடியாது யாரும் போரைத் தொடங்க மாட்டார்கள் எனவும் பிரதமர் கூறவுள்ளார்.

நேட்டோ அமைப்பின் தலைவர்களிடையே நிலவும் கருத்து முரண்பாடுகள் ஆழமாகி வரும் நிலையில் இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியாவுக்கு வருகை தந்துள்ள தலைவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு பக்கிங்ஹம் அரண்மனையில் இடம்பெற்றது.

இந்த உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக திங்கட்கிழமை இரவு பிரித்தானியா வந்தடைந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று இரவு பிரதமர் பொரிஸ் ஜோன்சனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சிரியா, லிபியா மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக் குறித்து விவாதிப்பதற்காக ஜேர்மன் அதிபர் அங்கெலா மெர்க்கல், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் ஏர்டோகன் ஆகியோருடனும் பிரதமர் நேற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.