இலங்கைக்கு சுவிஸ் விதித்துள்ள தடை!!
சுவிட்சர்லாந்து செல்லும் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள ராவய தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் மாலகந்தே சுதத்த தேரர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர் அண்மையில் கடத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு சுவிஸ் செல்வதற்கான அழைப்பு ஒன்று கிடைத்தது. அதற்கான ஆவணங்களை இன்று சுவிஸ் விசா நிலையத்தில் சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டது.
அதற்கமைய நான் ஆவணங்களை சமர்ப்பிக்க சென்றேன். அங்கு இலங்கையர்களுக்கான விசா வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகளிடம் என்னிடம் கூறினார்கள்” என தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை என தகவல் வெளியிடப்பட்டு உள்ளன.
சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்டமையினையடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் குறித்த பணியாளர் இலங்கையினை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக சுவிஸ் இத்தகைய முடிவினை எடுத்திருக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை