தென்னிலங்கை இளைஞர் காங்கேசன்துறை கடலில் மாயம்!!

காங்கேசன்துறை தல்செவன உல்லாசக் கடற்கரைக்கு சுற்றுலா சென்ற தென்னிலங்கை இளைஞர் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அவரைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.


குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மாத்தறையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞனுடன் சென்றவர்கள் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை வழங்கியுள்ளனர்.

மேலும் கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.