விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு முழுவதும்!

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘டிசெம்பர் மாதமானது, பல்வேறு உற்சவங்கள், கொண்டாட்டங்கள் உள்ள மாதமாகும்.

இம்மாதத்துக்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு, அரசாங்கத்துக்கு உள்ளது.

அதற்கான வேலைத்திட்டங்கள், ஏற்கெனவே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.