சுவிஸ் தூதரக அதிகாரி வாக்குமூல விசாரண தொடர்கிறது!!
கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரியிடம் இன்றும் (செவ்வாய்க்கிழமை) வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
சுவிஸ் அதிகாரியிடம் நேற்று இரண்டாவது நாளாக 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற அவர் மீண்டும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் நேற்று மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், அவர் இன்றைய தினமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய அதிகாரியிடம் மீண்டும் முன்னிலைப்படுத்தவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் கானியா வெனிஸ்டர் பிரான்சிஸிடம் மீண்டும் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதாக விசாரணையின் முன்னேற்றம் தொடர்பாக நேற்று கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவிற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்தது.
சாட்சியங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, தூதரக பெண் அதிகாரிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
சுவிஸ் அதிகாரியிடம் நேற்று இரண்டாவது நாளாக 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற அவர் மீண்டும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதன் பின்னர் நேற்று மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், அவர் இன்றைய தினமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்திய அதிகாரியிடம் மீண்டும் முன்னிலைப்படுத்தவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் கானியா வெனிஸ்டர் பிரான்சிஸிடம் மீண்டும் வாக்குமூலம் பெற வேண்டியுள்ளதாக விசாரணையின் முன்னேற்றம் தொடர்பாக நேற்று கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்னவிற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்தது.
சாட்சியங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, தூதரக பெண் அதிகாரிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை