மாயமானது யாழ் மாநகர சபையில் ஏசி - லப்ரொப்!

ஈ.பி.டி.பியின் ஒத்துழைப்பு இல்லாமல் உங்களால் முதல்வராகியிருக்க முடியுமா? என மு ன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா எழுப்பிய கேள்வியால் யாழ்.மாநகரசபையின் நேற்றைய அமர்வு களேபரமாகியது.


இதனைத் தொடர்ந்து யாழ் மாநகர சபை மேயர் ஆர்னோல்ட் ஆதரவு கட்சியினருக்கும், ஈபிடிபி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் முன்னாள் முதல்வரால் கொள்வனவுசெய்யப்பட்ட லப்டொப் எங்கே என்றும் ஈ.பி.டி.பியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் அலுவலகத்திற்கு கொள்ளவு செய்யப்பட்ட ஏ.சி இயந்திரம் எங்கே, சபைக்கு செலுத்த வேண்டிய 6 இலட்சம் ரூபா செலுத்தாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பது போன்ற கேள்விகளையும் ஈ.பி.டி.பியினர் எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து, இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் யாழ்.மாநகரசபையின் அமர்வு களேபரமாகியதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.