சிலியில் இராணுவ விமானம் விபத்து!!
சிலியில் மாயமான இராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டின் விமானப் படை உறுதிபட தெரிவித்துள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) சிலியின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு 38 பேருடன் பயணித்த ஏசி-130 ஹெர்குலஸ் வகையைச் சேர்ந்த விமானம், பயணித்த சிலமணி நேரங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.
இதனையடுத்து, மாயமான சிலி இராணுவ விமானத்தை தேடும் பணியினை, சிலி மீட்புக்குழுவினர் தீவிரமாக முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், விமானம் மாயமாகி ஏழு மணி நேரத்துக்குப் பிறகு, இவ் விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் விமானப்படை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிலி விமானப்படை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‘விமானத்துடனான தொடர்பை இழந்து பல மணி நேரம் ஆன நிலையில் அது விபத்தில் சிக்கி இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது’ என பதிவிட்டுள்ளது.
மேலும், கிடைக்கக்கூடிய அனைத்து தேசிய மற்றும் வெளிநாட்டு விமானங்கள் மற்றும் கப்பல்களின் உதவியுடன் இணைந்து, இந்த விபத்தில் தப்பிப்பிழைத்தவர்களைத் தொடர்ந்து தேடி வருவதாக சிலி விமானப்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து சிலி ஜனாதிபதி செபாஸ்டியன் பினேரா, தான் விமானப்படை தலைமையகத்தில் இருந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நேற்று (திங்கட்கிழமை) சிலியின் தெற்கு பகுதியில் இருந்து அண்டார்டிகாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு 38 பேருடன் பயணித்த ஏசி-130 ஹெர்குலஸ் வகையைச் சேர்ந்த விமானம், பயணித்த சிலமணி நேரங்களிலேயே விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது.
இதனையடுத்து, மாயமான சிலி இராணுவ விமானத்தை தேடும் பணியினை, சிலி மீட்புக்குழுவினர் தீவிரமாக முன்னெடுத்து வந்தனர்.
இந்நிலையில், விமானம் மாயமாகி ஏழு மணி நேரத்துக்குப் பிறகு, இவ் விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டின் விமானப்படை டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து சிலி விமானப்படை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‘விமானத்துடனான தொடர்பை இழந்து பல மணி நேரம் ஆன நிலையில் அது விபத்தில் சிக்கி இருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது’ என பதிவிட்டுள்ளது.
மேலும், கிடைக்கக்கூடிய அனைத்து தேசிய மற்றும் வெளிநாட்டு விமானங்கள் மற்றும் கப்பல்களின் உதவியுடன் இணைந்து, இந்த விபத்தில் தப்பிப்பிழைத்தவர்களைத் தொடர்ந்து தேடி வருவதாக சிலி விமானப்படை தெரிவித்துள்ளது.
இது குறித்து சிலி ஜனாதிபதி செபாஸ்டியன் பினேரா, தான் விமானப்படை தலைமையகத்தில் இருந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை