லெப் கேணல் மறவன்,லெப்.கேணல் மனோஜ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

மன்னார் மாவட்டம் நகர்ப் பகுதியில் 11.12.1998 அன்று எதிர்பாராத விதமாக சிறிலங்கா சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் வில்வம் / ஜோன் அவர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.


விடுதலையின் விழுதெறிந்தவன் மேஜர் வில்வம்…..

வவுனியா மாவட்டம் மரகாரன்பிலவு பகுதியில் 11.12.2000 அன்று சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் சிவதர்சன் அவர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

திருகோணமலை மாவட்டம் பாலைத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படை புலனாய்வுப்பிரிவு முகாம் மீது 11.12.2001 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் மனோஜ் உட்பட நான்கு போராளிகளின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

லெப். கேணல் மனோஜ் (பாலசிங்கம் வசந்தகுமார் – ஓகில், உவர்மலை, திருகோணமலை)
மேஜர் குமாரவேல் (செல்வராசா ஆனந்தன் – மாமாங்கம், மட்டக்களப்பு)
லெப். கலைமதி (செல்வநாயகம் தர்சினி – மூதூர், திருகோணமலை)
2ம் லெப்.தேவன் (கென்றி செபஸ்ரியான் – மூதூர், திருகோணமலை)
அண்ணன் மனோஜின் பாதச்சுவட்டை நோக்கி நாங்களும் இங்கு தடம் பதிக்கின்றோம்……

வாழைச்சேனை செற்றடி காவல்துறை நிலையம் மற்றும் படை முகாம் மீது 11.12.2001 அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கப்டன் சற்குணராஜ் உட்பட பத்து போராளிகளினதும் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கப்டன் சற்குணராஜ் (தம்பிப்பிள்ளை மதியழகன் – மத்தியமுகாம், அம்பாறை)
கப்டன் பிரதாவரன் (இராசையா சற்குணம் – மல்வத்தை 2, அம்பாறை)
கப்டன் மணிராஜ் (சிங்காரவேல் கமலேந்திரராசா – வாகரை, மட்டக்களப்பு)
லெப்.மணியரசன் (குமாரசூரியம் ரவிச்சந்திரன் – சித்தாண்டி, மட்டக்களப்பு)
லெப். முகுந்தன் (நடராசா யோகேஸ்வரன் – விநாயகபுரம், அம்பாறை)
2ம் லெப். உமாகரன் (சிவசம்பு சசிக்குமார் – கரடியனாறு, மட்டக்களப்பு)
2ம் லெப். வினோகரன் (சதாசிவம் சௌந்தராஜன் – நெடியமடு, மட்டக்களப்பு)
2ம் லெப். மணிகண்ணன் (கணேஸ் சண்முகநாதன் – சந்திவெளி, மட்டக்களப்பு)
2ம் லெப். முகுந்தனன் (அழகப்பொடி ஜெயகாந்தன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
2ம் லெப். மணிப்பிறை மகேந்திரன் மகேஸ்வரன் – கரடியனாறு, மட்டக்களப்பு)

முல்லைத்தீவு மாவட்டத்தில் 11.12.2004 அன்று சுகையீனம் காரணமாக சாவினைத் தழுவிக் கொண்ட கடற்புலி மூத்த உறுப்பினரும் / கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளருமான லெப். கேணல் மறவன் மாஸ்ரர் அவர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

உடுத்துறை, வடமராட்சி மாவீரர் துயிலுமில்லத்தில் விதைத்த முதல் லெப்.கேணல் இவரே ஆவார்.

இம்மாவீரர்களிற்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.