விகாரைகளின் உண்டியலை உடைத்த சந்தேக நபர் கைது!!

நாட்டின் பல்வேறு பௌத்த விகாரைகளிலுள்ள உண்டியலை உடைத்து பணம் திருடிய நபரொருவரை பாதுக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் போபே ஸ்ரீ சுதர்மாராம விகாரைக்கு சென்ற குறித்த இளைஞர், அன்றைய இரவு மாத்திரம் விகாரையில் தங்குவதற்கு அனுமதி கேட்டுள்ளார்.

இதன்படி, குறித்த இளைஞருக்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை விகாராதிபதி செய்து கொடுத்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த விகாரையிலுள்ள உண்டியலுக்கும் அன்றிரவு மேற்படி நபர் கைவரிசையை காட்டியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.