யாழ்ப்பாணம் கோண்டாவிலில் ரயில் விபத்து!

யாழில் புகையிரதத்துடன் மோதுண்டவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரவு நேர தபால் புகையிரதத்துடன் நபர் ஒருவர் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியிருந்தார்.

விபத்துக்குள்ளானவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

இந்த விபத்து நேற்று காலை எட்டு மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கபெறவில்லை. சடலம் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிந்தவர் 50 வயது மதிக்கத்தக்க நபர் என பொலிஸார் உறுப்படுத்தினர். மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.