கவிதையே.. -கவிதை!!
நான் எப்போதெல்லாம்
என்னை மறக்கின்றேனோ
அப்போதெல்லாம் உன்னை
அழைத்துக்கொள்கின்றேன்...
என் நினைவுகளினால்தான்
உன்னை வரைந்துகொள்கின்றேன்....
#மன்னிக்கவும்...
வார்த்தைகளினால்தான்
உன்னை வரைந்துகொள்கின்றேன்...
என் நினைவுகளினால்தான் உன்னை
அழகாக்கியும்கொள்கின்றேன்...
எழுதிடத்தெரிந்த எனக்கு
உன் எல்லையின் முடிவுகளை
அறிந்திடத்தெரிவதில்லை...
பொய்களின் பரிணாமங்களான உன்னை
பொய்களின் பரிமாணங்களாகவே என்னால்
எழுதிடவும்முடிவதில்லை...
உன் ஒவ்வோர் முடிவிலும்தான்
உன்னை ஆரம்பமாகவும் வைத்துக்கொள்கின்றேன்...
உன் ஒவ்வோர் ஆரம்பத்திலும்தான்
உன் முடிவுகளையும் தேடிக்கொள்கின்றேன்...
வார்த்தைகளினால்தான்
உன்னை நேசித்துக்கொள்கின்றேன்...
உன் சுவாசத்தின் இடுக்குகளில்தான்
தினம் கூடுகட்டியும்கொள்கின்றேன்...
நீ தென்றலிலும் வருகின்றாய்...
வான்கொட்டும் மழையோடும் வருகின்றாய்...
பூக்களிலே பிறக்கின்றாய்...
இரவின் நிலவோடும் ஒளி வீசுகின்றாய்...
மறவாமல் தினம் என் நெஞ்சோடும்
நீ ஜனித்தும்கொள்கின்றாய்...
சொல்லாத கதைகளுக்கு
வடிவங்கள் கொடுக்கின்றாய்...
சொல்லிவிட்ட கதைகளுக்கு
அர்த்தங்களும் சேர்க்கின்றாய்...
#ஆனால்....
நான் எப்போதெல்லாம்
என்னை மறக்கின்றேனோ
அப்போதெல்லாம் உன்னை
அழைத்துக்கொள்கின்றேன்...
கவி #தையே
என்னைத்தினம் உன்னோடு
#தைத்துக்கொள் நீயே...
இப்படிக்கு
-கவிஞர் வியன்சீர்-
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
என்னை மறக்கின்றேனோ
அப்போதெல்லாம் உன்னை
அழைத்துக்கொள்கின்றேன்...
என் நினைவுகளினால்தான்
உன்னை வரைந்துகொள்கின்றேன்....
#மன்னிக்கவும்...
வார்த்தைகளினால்தான்
உன்னை வரைந்துகொள்கின்றேன்...
என் நினைவுகளினால்தான் உன்னை
அழகாக்கியும்கொள்கின்றேன்...
எழுதிடத்தெரிந்த எனக்கு
உன் எல்லையின் முடிவுகளை
அறிந்திடத்தெரிவதில்லை...
பொய்களின் பரிணாமங்களான உன்னை
பொய்களின் பரிமாணங்களாகவே என்னால்
எழுதிடவும்முடிவதில்லை...
உன் ஒவ்வோர் முடிவிலும்தான்
உன்னை ஆரம்பமாகவும் வைத்துக்கொள்கின்றேன்...
உன் ஒவ்வோர் ஆரம்பத்திலும்தான்
உன் முடிவுகளையும் தேடிக்கொள்கின்றேன்...
வார்த்தைகளினால்தான்
உன்னை நேசித்துக்கொள்கின்றேன்...
உன் சுவாசத்தின் இடுக்குகளில்தான்
தினம் கூடுகட்டியும்கொள்கின்றேன்...
நீ தென்றலிலும் வருகின்றாய்...
வான்கொட்டும் மழையோடும் வருகின்றாய்...
பூக்களிலே பிறக்கின்றாய்...
இரவின் நிலவோடும் ஒளி வீசுகின்றாய்...
மறவாமல் தினம் என் நெஞ்சோடும்
நீ ஜனித்தும்கொள்கின்றாய்...
சொல்லாத கதைகளுக்கு
வடிவங்கள் கொடுக்கின்றாய்...
சொல்லிவிட்ட கதைகளுக்கு
அர்த்தங்களும் சேர்க்கின்றாய்...
#ஆனால்....
நான் எப்போதெல்லாம்
என்னை மறக்கின்றேனோ
அப்போதெல்லாம் உன்னை
அழைத்துக்கொள்கின்றேன்...
கவி #தையே
என்னைத்தினம் உன்னோடு
#தைத்துக்கொள் நீயே...
இப்படிக்கு
-கவிஞர் வியன்சீர்-
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை