தமிழர் காணியை அபகரித்த சில முஸ்லீம்கள்!!

மன்னார் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பூசாரியார் குளம் கிராம மக்கள் நேற்று காலை எதிர்ப்பு போரட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.


பூசாரியார் குளம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு சொந்தமான பெருந்தொகையான காணிகளை அயல் கிராமமான மதீனா நகர் கிராம மக்கள் அபகரித்து வந்த நிலையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது அப்பகுதியில் குறித்த இரு கிராம மக்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இப்போரட்டத்தில் வன்னி பாரளுமன்ற உறுப்பின்களான சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் சிவமோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினர்.

பூசாரியார் குளம் கிராம மக்களுக்கு சொந்தமான சுமார் 150க்கு அதிகமான ஏக்கர் காணியில் உள்ள காடுகள் இவ்வாறு தள்ளப்பட்டு எல்லைக்கற்கள் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மடு பிரதேச செயலாளர் குறித்த பகுதியில் காணி தொடர்பில் மேற்கொண்டு வந்த அணைத்து நடவடிக்கைகளையும் இடை நிறுத்தினார்.

இந்த நிலையில் மடு பொலிஸார் மற்றும் வன வள திணைக்கள அதிகாரிகளும் குறித்த பகுதிக்குச் சென்று காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன் நடவடிக்கையில் ஈடுபட்ட முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் பொலிசார் தெரிவித்தனர்.

வனலாகா கொடுத்த முறைப்பாட்டை அடுத்தே இக் கைது நடவடிக்கை மேற்கொள்ள பட்டதாக கூறப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.