வன்னி மாவட்ட பட்டதாரிகளுக்கான விசேட கலந்துரையாடல்!!

வன்னி மாவட்டத்திலுள்ள அனைத்து பட்டதாரிகளுக்குமான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.


நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மோகனதாஸ் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு வன்னி மாவட்ட பட்டதாரிகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தினை செயற்திறன் கொண்ட அமைப்பாக உருவாக்கும் பொருட்டு பேராசியர் மோகனதாஸின் நேரடி கண்காணிப்பின் கீழ் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெறவுள்ளது.

அத்துடன், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களுக்கான அபிவிருத்திக்கான இணைப்புப்பட்டதாரிகள் சங்கத்தை உருவாக்குதல் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.