செவ்வாய் கிரகத்தில் நீர்ப்பனிக்கட்டிகள்!!

செவ்வாய் கிரகத்தில் தரையில் ஒரு அங்குலத்திற்கு கீழ் நீர்ப்பனிக்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


பூமியை போன்று ஏனைய கிரகங்களில் உயிரினங்கள் வாழ வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்த ஆய்வுகள் பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக உலக நாடுகள் பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றன. குறிப்பாக நாசா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஏனைய கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பூமியும் செவ்வாயும் சில பண்புகளில் ஒத்துள்ளதால் செவ்வாய் கிரகத்திலும் உயிரினங்கள் வாழ முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

மனிதர்களின் முக்கிய தேவையான நீர் இருக்கிறதா என்பதையே விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு அங்குலத்திற்கு கீழ் நீர்ப்பனிக்கட்டிகள் இருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.

மேலும் செவ்வாய் கிரகத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு அங்குலத்துக்கு கீழ் நீர்ப்பனிக்கட்டிகள் இருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதி செய்துள்ளன.

இது தொடர்பான வரைபடங்களையும் நாசா வெளியிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.