இறந்த யானையும் குட்டியும் கண்டெடுப்பு!

வவுனியா- பறயனாளங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்நாட்டி கணேசபுரம் பகுதியில் யானையும் யானைகுட்டியும் உருக்குலைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளதை ஊர்வாசிகள் அவதானித்துள்ளனர்.


கல்நாட்டி பகுதியில் அமைந்துள்ள காணிக்கு, நேற்று (சனிக்கிழமை) காலை விவசாயிகள் சிலர் சென்றிருந்த சமயத்தில் உயிரிழந்த நிலையிலிருந்த யானையின் எச்சங்களை கண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பறயனாளங்குளம் பொலிஸாருக்கு அவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் பொலிஸார், வனஜீவராசிகள் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன்  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த யானையும் குட்டியும் பத்து நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் உயிரிழந்த யானையின் சில பாகங்கள், உடற்கூற்று பரிசோதனைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.