ஹொங்கொங்கில் மீண்டும் வன்முறையாக மாறிய போராட்ட களம்!

ஹொங்கொங்கில் ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டம், வன்முறையாக மாறியுள்ளது.


கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக உச்சநிலையை அடைந்த கவுலூன் பேயின் உள்ள டெல்ஃபோர்ட் பிளாசா வணிக வளாகத்திலேயே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போராட்டமே வன்முறையாக மாறியது.

குறித்த போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு, போராட்டக்காரர்கள் மீது கலகப் பிரிவு பொலிஸார், கண்ணீர் புகை மற்றும் பெப்பர் ஸ்பிரேவை பயன்படுத்தியதாகவும், இதன்போது சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சிலர் அங்குள்ள கடைகளில் உள்ள கண்ணாடிகளை உடைத்ததாகவும், ஆனால் சிலர் முன்னதாகவே அங்குள்ள கடைகளை முடிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஹொங்கொங்கின் தலைவருக்கும் சீனாவின் ஜனாதிபதி இடையில் பெய்ஜிங்கில் முக்கியமான சந்திப்பொன்று நடைபெறுவதற்கு முன்னதாக, இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

முகமூடி அணிந்த போராட்டக் குழு, கறுப்பு நிற உடையணிந்து வணிக வளாத்திற்குள் அணி வகுத்து சுதந்திரத்திற்காக போராடு’, ‘எங்களுக்கு நீதி வேண்டும்’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகின்றது.

ஹொங்கொங்கில் ஜனநாயகத்தை வலியுறுத்தி நடைபெறும் போராட்டம் ஆறு மாதங்களை எட்டியுள்ள நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக 6,022 பேரைக் கைது செய்துள்ளதாகவும், 6,022 பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸாரின் அறிக்கை தெரிவிக்கின்றது.

ஹொங்கொங்கில் ஜனநாயக ஆட்சி முறை கோரியும், சீனாவின் அடக்கு முறைக்கு எதிராகவும் மக்கள் தன்னெழுச்சியாக ஆறு மாதங்களாக தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.