நியூஸிலாந்து எரிமலை வெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

நியூஸிலாந்தின் வெள்ளைத்தீவிலுள்ள எரிமலை வெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 18ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், காயமடைந்த 26 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், மாயமான மூன்று பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

மாயமான மூவரின் சடலங்களை கண்டெடுக்கும் பணிகளை வான்வழி உளவு விமானங்கள் மூலமும், தரை மார்க்கமாகவும், முன்னெடுத்து வருவதாகவும், அவர்களின் உடல்கள் சாம்பலில் மூடப்பட்டிருக்க கூடுமெனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த திங்கட்கிழமை, வடகிழக்கு நியூஸிலாந்து கடற்கரையில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ள விரிகாரி வெள்ளை தீவில் இந்த ஏரிமலை வெடிப்பு மதியம் 2:11 மணியளவில் வெடித்தது.

47 சுற்றுலாப்பயணிகள் எரிமலைக்கு அருகாக இருந்த நிலையிலேயே, இந்த எரிமலை குமுற ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.