வவுனியாவில் சனசமூக நிலையம் திறந்து வைப்பு!!

வவுனியா நகரசபைக்கு உட்பட்ட சின்னபுதுக்குளம் துர்க்கா சனசமூக நிலையம் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


குறித்த திறப்பு விழாவானது இன்றைய தினம் சனசமூக நிலையத்தின் தலைவர் பூலோகசிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், உபநகரபிதா சு.குமாரசாமி, செயலாளர் இ.தயாபரன், நகரசபை உறுப்பினர்களான க.சந்திரகுலசிங்கம், ரி.கே.ராஜலிங்கம், த.பரதலிங்கம், சு.காண்டீபன், சமந்தா, புஞ்சிகுமாரி, மஞ்சுளா மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியா நகரசபையின் செயலாளர் இ.தயாபரனால் கடந்த 2015ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட 50 இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட குறித்த கட்டடமே தற்போது மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.