யாழில் தங்கத்தின் விலை அதிகரிப்பு!!

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கத்தின் விலை குறிப்பிடும்படியாகக் குறைக்கப்பட்டு வந்த நிலையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) பவுணுக்கு 350 ரூபாயினால் உயர்த்தப்பட்டுள்ளது.


கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை ஒரே நாளில் 600 ரூபாயாக அதிகரித்தது. நேற்று மேலும் ஒரு பவுணுக்கு 150 ரூபாய் அதிகரிக்கப்பட்ட நிலையில் இன்றும் அதன் விலை 350 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை, யாழ்ப்பாணத்தில் ஒரு பவுண் (22 கரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 66 ஆயிரத்து 900 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று 66 ஆயிரத்து 550 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

தூய தங்கத்தின் விலை, ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுணுக்கு 400 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 72 ஆயிரத்து 600 ரூபாயிலிருந்து இன்று 73 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.