எஸ்.எம்.சார்ள்ஸ் வடக்கு மாகாண ஆளுநராக நியமனம்!!

முன்னாள் சுங்கத்தின் திணைக்களத்தின் பணிப்பாளரும் சுகாதார அமைச்சின் செயலாளருமான திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் வடமாகாண ஆளுநராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.


இதற்கு முன்னர் வடக்கு மாகாண ஆளுநரின் பதவியை ஏற்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனிடம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார். இருப்பினும், அவர் அதனை மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கு ஆளுநராக பெண்ணை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல்

வடக்கு மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலராக உள்ள பி.எம்.எஸ் சாள்சை நியமிப்பதற்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கை நிர்வாக சேவை அலுவலகர் ஒருவரை அவரது சேவைக்கான வரப்பிரசாதங்களுடன் ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அமைச்சரவை இந்த ஒப்புதலை வழங்கியது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்று மாலை கூடிய அமைச்சரவையில் இலங்கை நிர்வாக சேவையில் மூத்த அதிகாரியான பிஎம்எஸ் சாள்சை நியமிப்பதற்கான முன்மொழி முன்வைக்கப்பட்டது.

அதன்போதே அமைச்சரவை இந்த ஒப்புதலை வழங்கியது.

இதன்மூலம் வடக்கு மாகாண ஆளுநராக பிஎம்எஸ் சாள்ஸ் நியமிக்கப்படுவதுடன், அவர் இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாக தொடர்ந்து சேவையில் இருப்பார்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.