சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரம் – ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!!

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சுவிஸ் தூதரக பணியாளர் கூறிய குற்றச்சாட்டுடன், கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்திற்கு தொடர்பில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டுச் செய்தியாளர்களுடனான ஊடக சந்திப்பிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “கார்னியரின் விவகாரத்தை, இரண்டு அரசாங்கங்களுக்கு இடையிலான பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என்று சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீற்றர் மோக்கிடம் கூறினேன்.

அத்துடன், அவரது குற்றச்சாட்டுகளில் இருந்து தூதரகம் விலகி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டேன். சுவிஸ் தூதரகத்தின் ஆரம்ப எதிர்விளைவு குறித்து எங்களால் தவறு காணமுடியாது.

ஏனெனில் செய்தி முதலில் கிடைத்தபோது, தமது பணியாளருடன் நிற்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருந்தது” என்று குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.