26 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!!

பலத்த மழை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள 26 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் திறக்கப்பட்டுள்ளது.


அனுரதாபுரம் மாவட்டத்திலுள்ள இராஜாங்கனை, நுவரவேவா மற்றும் நாச்சதுவ உள்ளிட்ட 7 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அத்தோடு கலா வேவ ஓயாவின் நீர்மட்டம் அதிரித்துள்ளமையினால் தலாவா, இபலோகாம , தம்புத்தேகாம மற்றும் கால்னேவ ஆற்றை அன்மித்து வாழும் பொதுகமக்ள் சற்று அவதானமாக செயற்படுமாறு அணர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் உள்ள இங்கினிமிட்டி மற்றும் தபோவா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு , மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

அத்தொடு மாஹாவலி கங்கை பெருக்கெடுத்து காலா ஒயாவிற்கு திருப்பிடப்பட்டுள்ளமையால் மக்கள் அவதானமாக செயல்படுமாறு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.