தொப்புள்கொடி - கவிதை!!

அதோ  அந்த
அய்யனார்
கோவில்தான்
எங்கள்
 குலத்தெய்வம்


கண்ணனும்
சூசையும்  என்
சகோதரர்கள்

அம்மை போட்டால்
மாரியத்தா
 கோவிலே எங்கள்
வைத்தியச்சாலை

கருப்பாயி
பாட்டித்தான்
வேப்பிலையடித்து
துன்னூர்
 பூசிவிடும்

சமத்துவம் 
நிறைந்த அந்த
ஆலமரத்து
பள்ளி

அந்த ஆலமரமே
என் போதிமரம்

இஸ்லாமியர்
வீட்டு குழந்தைக்கு
காமாட்சியக்கா
இராமாயணமும்
மகாபாரதம்
சொல்லிதந்த
கதை

கண்ணன்
எங்கேயோ 
பிறந்து  யாதவர்
குலத்தில் வளர்ந்ததுப்
போல்

நானும் அப்படியே

பெயர்தான்
முஸ்லிம் பெயர்
வளர்த்ததெல்லாம்
தொப்புள்கொடி
உறவுகள்

பசியென்றால்
அமுதா  அக்கா
கூழாவது
கொடுக்கும்

தகப்பனார்
இறந்தப்பிறகு
பிழைப்பதற்கு
வந்தோம்
கிராமத்திற்கு

பிறந்த
கிராமத்திற்கும்
வளர்ந்த
 கிராமத்திற்கும்
மூன்று மையில்தான்
வித்தியாசம்

கிராமத்து
தர்மர்கள் 
எங்களுக்கு
அன்போடு
அடைக்கலம்
தந்தார்கள்

வீடு கட்ட
பெருமாள்
அண்ணன்
இடம் தந்தார்

ஜான்ஸ் அக்கா
ஓலை கம்பு மரம்
தந்தார்
கிராமம்  வாழ்வு
தந்தது

அந்த தொப்புள்
கொடிகளுக்கு
தீங்கு  நினைப்பதே
பாவம்

கிராமத்தில்
தீட்டு. தீண்டாமை
இருக்கு  ஆனால்

பசியென்றால்
புசியென்று
சொல்ல
 தர்மர்களும்
இருக்கின்றார்கள்

கிறிஸ்த்துவன்
முஸ்லிம்
பௌத்தனென்று
வேசம்
போட்டுக்கொண்டோம்
வாழ்வதெல்லாம்
தொப்புள்கொடி
உறவுகளோடு
......................
கவிஞர்
பட்டுக்கோட்டை  காதர்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.