ஹோண்டுராஸ் சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் 36 கைதிகள் உயிரிழப்பு!
மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த வாரத்தில் மட்டும் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
ஹோண்டுராஸின் தலைநகர் பகுதியிலிருந்து 60 கிலோ மீட்டர் உள்ள சிறைச்சாலையில் கைதிகள் இடையே நேற்று ஏற்பட்ட சண்டையில் 18 பேர் உயிரிழந்ததாகவும் மற்றொரு சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 18 பேர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கைதிகளுக்கு இடையே தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து ஹோண்டுராஸ் அரசு சமீபத்தில் சிறைச்சாலை அமைப்பில் அவசர நிலையைப் பிறப்பித்தது.
மேலும், சிறைச்சாலையில் பணிபுரிபவர்கள் ஆறு மாதங்களுக்கு வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதிகளுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளில் உள்ள சிறைச்சாலையில் கைதிகள் இடையே வன்முறை ஏற்படுவது வழக்கமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை