இரண்டு வர்த்தகர்கள் யாழ்ப்பாணத்தில் கைது!

யாழில் விலைக் கட்டுப்பாட்டு சோதனை அதிகாரிகளுடன் முரண்பட்ட வர்த்தகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஜனாதிபதியினால் அரிசியின் கட்டுப்பாட்டுவிலை தொடர்பில் அறிவிக்கப்பட்ட பின்னர் நாடுமுழுவதும் விலை கட்டுப்பாட்டு சோதனை பிரிவினரால் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் யாழ் சத்திரத்துச் சந்திக்கு அருகாமையில் உள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு பொலிஸார் மற்றும் விலை கட்டுப்பாட்டு அதிகாரிகள் இன்று விஜயம் செய்துள்ளனர்.

இதன்போது அங்கே விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாமை தொடர்பாக அதிகாரிகளால் வினா எழுப்பப்பட்டபோது , வர்த்தக உரிமையாளர் மிகவும் கீழ்த்தரமான அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளார்.

இதனையடுத்து அதிகாரிகள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், அங்கு யாழ் பொலிஸார் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அவருடைய சகாவையும் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கைதானவர்களை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.