லொறி, கார், முச்சக்கரவண்டி மோதி விபத்து!!
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (வியாழக்கிழமை) மதியம் 2 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெயார்வெல் பகுதியில் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற லொறியொன்றுடன், நுவரெலியாவிலிருந்து பாணந்துறையை நோக்கி சென்ற கார் மோதுண்ட வேளை, மடுல்சீமையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, காரின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின்போது காரில் சென்ற மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த காரை செலுத்தி சென்ற பெண் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணத்தால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த பெண் சாரதி பாணந்துறை வைத்தியசாலையின் வைத்தியர் எனவும் அவரது இரு பிள்ளைகளுடன் நுவரெலியாவிற்கு சென்று மீண்டும் திரும்புகையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த விபத்து இன்று (வியாழக்கிழமை) மதியம் 2 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெயார்வெல் பகுதியில் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற லொறியொன்றுடன், நுவரெலியாவிலிருந்து பாணந்துறையை நோக்கி சென்ற கார் மோதுண்ட வேளை, மடுல்சீமையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, காரின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின்போது காரில் சென்ற மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த காரை செலுத்தி சென்ற பெண் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணத்தால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
குறித்த பெண் சாரதி பாணந்துறை வைத்தியசாலையின் வைத்தியர் எனவும் அவரது இரு பிள்ளைகளுடன் நுவரெலியாவிற்கு சென்று மீண்டும் திரும்புகையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்நிலையில் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை