செட்டிகுள படுகொலையின் 35 வது நினைவேந்தல் பொதுமக்களால் அனுஷ்டிப்பு!📷

1984 ம் ஆண்டு மார்கழி மாதம் இரண்டாம் திகதி ஶ்ரீ லங்கா இராணுவத்தினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட
ஐம்பத்திரெண்டு அப்பாவி தமிழர்களை நினைவு கூறும் 35 வது நினைவேந்தல் இன்று செட்டிகுளம் பொது விளையாட்டு மைதானத்தில் உணர்வெழுச்சியுடன் பொது மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மதகுருமார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் உபதவிசாளர் உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.