விராட் கோலியை விமர்சித்தது இதனால்தான்: சஞ்சய் மஞ்சரேக்கர்!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த டெஸ்ட் போட்டியின் போது, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலியை கடுமையாக விமர்சித்தார். "விராட் கோலிக்கு இன்னும் ஒரு போட்டியில் வாய்ப்புக்கொடுக்கலாம், அப்போதுதான் அவர் டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவர் இல்லை என்பது தெரியும்" என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதிவு செய்திருந்தார்.


அதற்கு பதிலடி கொடுப்பதற்கு கோலிக்கு வெகு நாட்கள் ஆகவில்லை. அடுத்த ஆட்டத்திலேயே 44, 75 மற்றும் இறுதி போட்டியில் ஒரு சதத்தையும் அடித்தார். அந்த போட்டியில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் விராட் கோலி ஆவார். பின்னர் மெல்ல மெல்ல தனது ஆட்டத்தை மேம்படுத்திய விராட் கோலி, தற்பொழுது ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

இந்த நிலையில் 2012ஆம் ஆண்டு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதிவு செய்த ட்விட்டை தற்பொழுது ட்ரெண்டுல்கர் (Trendulkar) என்னும் ட்விட்டர் பக்கம் ரீட்விட் செய்துள்ளது. இதற்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் பதிலளித்துள்ளார்.

இதற்கு தனது ட்விட்டரிலேயே பதிலளித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “நான் அந்த ட்விட்டை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் 11,0,23, 9 என்று மோசமாக ஆடிய விராட் கோலியை கிரிக்கெட் ரசிகர்களும்/ ஊடகங்களும் கடுமையாக விமர்சித்து அவரை டீமை விட்டு நீக்க சொன்னார்கள். ஆனால் நான்தான் அவருக்கு இன்னொரு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறினேன். தோனியும் என்னைப்போலவே சிந்தித்தார்." என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.