உணவு ஒவ்வாமையினால் 30 பேர் பாதிப்பு!!

விசேட விருந்துபசார வைபவம் ஒன்றில் உணவு ஒவ்வாததன் காரணமாக, எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமோதர பகுதியில் சிறுமி உட்பட 30 பேர், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ‘தெமோதர தோட்ட தொழிற்சாலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட அத்தோட்டத்தின் மக்களில் சிறுமி அடங்களாக ஆண்களும், பெண்களும் உணவு உட்கொண்டுள்ளனர்.

இதன்போது வழங்கப்பட்ட உணவு ஒவ்வாததன் காரணமாக வயிற்றோட்டம் மற்றும் வாந்தி ஏற்பட்டதன் காரணமாக இன்று காலை தெமோதர பிரதேச மற்றும் பதுளை மாவட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரே குடும்பங்களையும், வெவ்வேறு குடும்பங்களையும் சேர்ந்தவர்கள் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்களின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.