மன்னார் இளைஞர்களின் கலக்கலான ஓவியங்கள்!!!

நாட்டை அழகுபடுத்துவோம் செயற்திட்டத்தின் அடிப்படையில் தன்னார்வம் மிக்க இளைஞர்களின் முயற்சியில் மன்னார் நகர் பகுதி முழுவதும் வண்ணமயமான சித்திரங்கள் மூலம் அழகுபடுத்தப்பட்டுள்ளது.


மன்னார் கச்சேரி மற்றும் பொலிஸ் நிலைய பகுதிகளில் மன்னார் நகர் பகுதியை அழகுபடுத்தும் முகமாக தமிழ் பாரம்பரியங்கள் மன்னார் பகுதியில் காணப்படும் சுற்றுலா தளங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான ஓவியங்கள் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஓவியங்கள் வரையப்பட்டு மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட இளைஞர்கள் பல நாள் முயற்சியிலும் மன்னார் வாழ்மக்களின் நன்கொடைகளின் மூலமும் குறித்த ஓவியங்கள் வரையப்பட்டதுடன் இளைஞர்களும் சிறுவர்களும் குறித்த அழகுபடுத்தும் செயற்திட்டதில் ஆர்வமாக கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

குறித்த ஓவியங்களுள் ராவணன் பண்டார வன்னியன் எல்லாளன் போன்ற தமிழ் மன்னர்களின் ஓவியங்கள் அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.