இலங்கை வரும் ஒடிசா புலிகள்!!

இந்தியாவில் ஒடீஷாவின் புபர்நேச்சர் பகுதியில் உள்ள நன்தன்கனன் மிருகக்காட்சிசாலைக்கு இலங்கையின் ஆசிய நாட்டு சிங்கங்கள் நான்கை எடுத்துச் செல்ல அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள மிருக பரிமாற்ற முறையின் அடிப்படையில் இந்த மிருகங்கள் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளதாக நன்தன்கனன் மிருகக்காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் ஜயந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த சிங்கங்களுக்கு பதிலாக இந்தியாவில் இருந்து வெளிநாட்டு பறவைகள் அல்லது புலிகள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக தீர்மானிப்பட்டுள்ளது.

இதற்காக இந்திய அரசாங்கத்தினதும் அனுமதி கிடைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.