நாவலப்பிட்டியில் இனந்தெரியாத சடலம் மீட்பு!!

நாவலபிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாவலபிட்டி, ஹிந்தின்ன வனப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (31) முற்பகல் 11.30 மணி அளவில் மீட்கப்பட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நாவலபிட்டி, ஹிந்தின்ன வனப் பகுதியில் கிடந்த சடலத்தின் வலது கையின் ஒரு பகுதியினை நாய் ஒன்று எடுத்து வந்து குறித்த பகுதியில் உள்ள கற்பாறையில் விட்டு சென்றதை இனங்கண்ட பிரதேச மக்கள் நாவலபிட்டி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கமைய சம்பவம் இடத்திற்கு சென்ற நாவலபிட்டி பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு நாவலபிட்டி நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டு மரண விசாரணைகள் இடம்பெற்றதுடன் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி ஆதாரா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கபட்ட நபர் 58 வயதுடையவர் எனவும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.