மட்டக்களப்பு விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு!📷

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட கிரான் குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


தனியார் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்றில் இருந்து வாழைச்சேனை நோக்கிப் பயணித்த பேருந்தும் மட்டக்களப்பில் இருந்து காத்தான்குடி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் இவ்வாறு மோதியுள்ளன. முன்னால் சென்ற கார் ஒன்றை மோட்டார் சைக்கிளில் சென்றவர் முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்த விபத்தையடுத்து அங்கு கூடியவர்கள் விபத்துக்கு உள்ளான பேருந்து மீது தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து குறித்த விசாரணையை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.