வெளியேறினார்முன்னாள் இராணுவ தளபதி!

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தனது குடும்பத்துடன் துபாய் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

துபாய் நாட்டில் உள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றில் அவர் முன்னர் மேற்கொண்டு வந்த தொழில் அவருக்கு மீண்டும் கிடைத்துள்ளதாக துபாய் தகவல்கள் தெரிவிக்கின்றதாக சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மஹேஷ் சேனாநாயக்க மற்றும் அவரது குடும்பத்தினர் துபாய் சென்றமை தொடர்பான தகவல்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதேவேளை கடந்த மஹேஷ் சேனாநாயக்க இலங்கையின் இராணுவத் தளபதியாக கடமையாற்றிய வேளையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்திய அரசு முன்கூட்டியே வழங்கிய எச்சரிக்கை இராணுவத்திற்கும் கிடைத்திருந்ததாக சிங்கள பத்திரிகை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.