திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் நிலையினை பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகி மாணவி சாதனை!

திருகோணமலை ஸாஹிறா கல்லூரியில் விஞ்ஞான துறையில் கற்ற மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த மீராசா பாத்திமா முஸாதிகா விஞ்ஞான பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் 1ம் நிலையினை பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளார்.


முஸாதிக்காவின் எதிர்கால கனவு VOG ஆக வந்து இனமத பேதங்களுக்கு அப்பால் சேவையாற்ற வேண்டும் என்பதாகும்.

இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவியின் வீட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தௌபீக் விஜயம் செய்து வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் நேரில் சென்று குறித்த மாணவிக்கும், அம்மாணவியின் பெற்றோருக்கும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு பரிசில்களையும் வழங்கி வைத்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.