நாட்டிலிருந்து வெளியேறிய தமிழர்களை இலங்கைக்கு அழைத்து வருவது அரசாங்கத்தின் பொறுப்பு!

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளின் பிரச்சினைகள் குறித்து கண்டறிவதற்காக விசேட பிரதிநிதியொருவரை நியமிக்குமாறு தான் ஜனாதிபதியிடம் தெரிவித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


இந்தியா நிறைவேற்றியியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இரண்டு நாடுகளுக்கும் இடையில் இந்த விடயத்தை கையாள்வதற்கான ஒரு பொருத்தமான ஒருங்கிணைப்பு அவசியம் என சுட்டிக்காட்னார்..

முறையான ஆவணங்கள் இல்லாமல் பல தசாப்தங்களாக இந்தியாவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு குறிப்பிட்ட சட்டத்தினால் பாதிப்பு ஏற்படலாம்.

இதனால், யுத்தகாலத்தில் நாட்டிலிருந்து வெளியேறிய இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

இது தொடர்பில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் சரியான பயன்களைப் பெற முடியாமல் போனதாகவும் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார் சுட்டிக்காட்டினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kili+
nochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.