இலங்கை விவகாரம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்திய அமெரிக்கா!!
அமெரிக்க - இந்திய உயர் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தைகளில், இலங்கை விவகாரம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக இலங்கை உள்ளிட்ட தெற்காசியாவில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் ஆகியோர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் வொசிங்கடனில் இரண்டாவது அமெரிக்க- இந்திய அமைச்சர்கள் மட்ட பேச்சுக்களை நடத்தினர்.
இந்தப் பேச்சுக்களின் பின்னர் கடந்த 18ஆம் திகதி கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சந்திப்பின்போது, தாங்கள் இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய நிலைமைகள் தொடர்பான மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இலங்கை தொடர்பாக விவாதிக்கப்பட்ட விடயம் குறித்து அவர் விரிவாகக் கூறவில்லை. இருந்தபோதிலும் சீனாவின் தலையீடுகள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது என, இராஜதந்திர வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளன.
இலங்கை உள்ளிட்ட தெற்காசியாவில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறிப்பாக இலங்கை உள்ளிட்ட தெற்காசியாவில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் ஆகியோர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருடன் வொசிங்கடனில் இரண்டாவது அமெரிக்க- இந்திய அமைச்சர்கள் மட்ட பேச்சுக்களை நடத்தினர்.
இந்தப் பேச்சுக்களின் பின்னர் கடந்த 18ஆம் திகதி கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சந்திப்பின்போது, தாங்கள் இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய நிலைமைகள் தொடர்பான மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இலங்கை தொடர்பாக விவாதிக்கப்பட்ட விடயம் குறித்து அவர் விரிவாகக் கூறவில்லை. இருந்தபோதிலும் சீனாவின் தலையீடுகள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது என, இராஜதந்திர வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளன.
இலங்கை உள்ளிட்ட தெற்காசியாவில் அதிகரித்து வரும் சீனாவின் தலையீடுகள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து கவலை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை