டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தவறவிடப்பட்ட மோசமான பிடி - நடந்தது என்ன?

நியுசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் ஜோ டென்லி தவறவிட்ட பிடி  கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.




ஜொவ்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில்  கேன் வில்லியம்சன்அடித்த  பந்தினை ஜோ டென்லி பிடித்துவிட்டார் என நினைத்து ஆர்ச்சர் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.



அவ்வேளை  ஆர்ச்சரை திரும்பி பார்க்குமாறு ஜோ ரூட் சைகை செய்துள்ளார், அதனை தொடர்ந்து ஆச்சர் திரும்பி பார்த்தவேளையே  ஜோ டென்லி பிடியை தவறவிட்டுள்ளதை அவர் உணர்ந்துள்ளார்.



ஆர்ச்சர் அதனை சிறித்து சமாளித்த போதிலும் ஏனைய இங்கிலாந்து வீரர்கள் தலையில் கைவைத்துள்ளனர்.

இதன் காரணமாக  போட்டியின் முடிவில்கேன் வில்லியம்சன் சதம்பெற்றுள்ளார்.



இந்த டெஸ்ட் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததை தொடர்ந்து நியுசிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

இதேவேளை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தவறவிடப்பட்ட மோசமான பிடி  இதுவென கருத்துக்கள் வெளியாகிவருகின்றன.



டெஸ்ட் போட்டி வர்ணணையாளராக பணியாற்றிக்கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் ராம்பிரகாஸ் ஜோ டென்லி உறக்கத்திலிருந்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.



இது மிகவும் ஆச்சரியமான விடயம்,கடந்த காலங்களில் இலகுவானபிடிகள்  சில தவறவிடப்பட்டதை நாங்கள் பார்த்திருப்போம் ஆனால் இதனை எப்படி தவறவிடமுடியும் என்பது எனக்கு புரியவில்லை, வாய்ப்பேயில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நான் மிக மோசமாதான் கிரிக்கெட் விளையாடுவேன் அதனுடன் ஒப்பிட்டால் ஜோ டென்லி தவறவிட்டது மிக மோசமான ஒரு  பிடி  என ரசிகர் ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்த பிடியை  தவறவிட்டமைக்காக ஜோ டென்லியை கைதுசெய்யவேண்டும் என மற்றொருவர் பதிவு செய்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.