பெண் கிராம சேவகருடன் மேலும் இருவருக்கு விளக்கமறியல்!

நிக்கவெரட்டிய பகுதியில் பாடசாலை மாணவி மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் கிராம சேவகர் மற்றம் 2 பேர் ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



நிக்கவரெட்டிய - கொட்டவேஹர பிரதேசத்தில், சிறுமியொருவரை மனிதாபிமானமற்ற வகையில் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆண் மற்றும் இரணடு பெண்களும் நிக்கவரெட்டிய நீதவான் நீதிமன்றத்தில் இன்று (04) முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொட்டவேஹர பிரதேசத்தில் 13 வயதான சிறுமி ஒருவரை அந்த சிறுமியின் இரண்டாவது தாய் மற்றும் அவரின் சகோதரி ஆகியோர் மனிதாபிமானமற்ற வகையில் தாக்கிய காணொளியை அயலவர் ஒருவர் தனது கையடக்க தொலைப்பேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அந்த காணொளி அததெரணவின் நேற்றைய செய்தியில் ஒளிபரப்பாகியது.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸார் சிறுமியின் தந்தை உள்ளிட்ட மேலும் இரு பெண்களையும் கைது செய்தனர்.

பின்னர் காயமடைந்த சிறுமி நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ஸ்கேன் பரிசோதனைக்காக அவர் தற்போது குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.