இலங்கையிலுள்ள இந்திய வங்கிகளுக்கு பூட்டு!

இலங்கையில் இயங்கிவரும் இரண்டு இந்திய வங்கிகள் தமது செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவுள்ளன.


அந்தவகையில் இந்தியாவின் அக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளே இவ்வாறு இலங்கையில் உள்ள தமது கிளைகளை மூடவுள்ளன.

குறித்த வங்கிகள் தமது நிதி நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதற்கு, இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது.

தாய் வங்கிகளிடம் இருந்து விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை குறித்த வங்கிகளின் செயற்பாடுகளை முடித்துக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அந்த வங்கிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் ரத்துச் செய்யப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.