தனிநபர் பிரேரணை மூலம் சிறுபான்மையினரை அரசியலிருந்து ஓரங்கட்டும் திட்டமா!!

சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு 15 ஆம் திருத்தச் சட்டத்தை மாற்றும் தனிநபர் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த தனிநபர் பிரேரணை, அரச வர்த்தமானியில் நாடாளுமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, “இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில், ஒரு தொகுதிக்கான வாக்கு வரம்பு மட்டம் 12.5 சதவீதமாக இருந்தது.

எனினும் 1988 இல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான எம்.எச்.எம்.அஷ்ரப்பின் வேண்டுகோளின் பேரில்  இந்த வரம்பு மட்டம் 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக பிரதான அரசியல் கட்சியும் கூட அதிகாரத்தை பிடிப்பதற்கு தேவையான 113 ஆசனங்களைப்பெற முடியாமல் போனது. எனவே பிரதான அரசியல் கடசிகளும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவைக்கோர வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் சிறுபான்மை கட்சிகள் கேட்கும் வகையில் பிரதான கட்சிகள் செயற்பட வேண்டியுள்ளமையினால் அரசாங்கம் பலமிழக்கும் நிலைமை காணப்படுகின்றது.

அத்துடன் சிறுபான்மையினரிடம் கையேந்தும் நிலையிலிருந்து விடுபடவே இந்த  தனிநபர் பிரேரணையை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.