அரசியல் கைதியின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான செல்லப்பிள்ளை மகேந்திரனின் திருவுடல் அஞ்சலிக்காக அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.


இன்று 04/01/2020, பி.ப, 4, மணிக்கு முறக்கொட்டான்சேனை இந்து மயானத்தில் அவரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட உள்லதாகவும் கூறப்படுகின்றது.

மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனையை சேர்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் கடந்த 27 ஆண்டுகளாக அரசியல் கைதியாக களுத்துறை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 1993 செப்டம்பர் 27ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றிவளைப்பின்போது இவர் கைதுசெய்யப்பட்ட்டிருந்தார்.

இவர் கைதுசெய்யப்படும்போது 19, வயது இளைஞனாவான். இந்நிலையில் நேற்று வரை 27, வருடங்களை சிறையில் வாழ்ந்த செல்லப்பிள்ளை மகேந்திரன் இறக்கும்போது 46, வயது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.