பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானம்!!

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் உத்தரவின் பேரில் நல்லாட்சி அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இந்த மசோதாவை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

பிரிட்டிஷ் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைப் போலவே தயாரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமல்படுத்துமாறு மனித உரிமை ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தன.

மேலும், இந்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு அமெரிக்காவும், பிரிட்டனும் இலங்கை அரசாங்கத்தைக் கோரியிருந்தன.

இந்த சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவானது, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கையை வெளிப்படையாகவே மீறும் நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.