கொலை வழக்கில் வெளியான பகீர் தகவல்!!

கடந்த 30ஆம் திகதி கிளிநொச்சியில் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கிளிநொச்சி மலையாளபுரம் புதுஜயன்குளத்தின் அணைக்கட்டின் கீழ்ப் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் குடும்பத்தலைவர் ஒருவரின் சடலம் கடந்த 30 ஆம் திகதி மீட்கப்பட்டது.

கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான முனியாண்டி விக்னேஸ்வரன் என்பவரே இவ்வாறு வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் அவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கிளிநொச்சி குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கொலை செய்யப் பயன்படுத்திய கத்தி மற்றும் தப்பித்துச் செல்ல பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் மறைந்து உள்ளதாகத் தெரிவிக்கப்படும் மேலும் ஒரு சந்தேகநபரையும் பொலிஸார் தேடி வருகின்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சட்டவிரோத மதுபானம் அருந்தும்போது கொல்லப்பட்ட நபருக்கும், தங்களுக்கும் இடையே வாய்த்தர்க்கத்தில் ஏற்பட்ட முரண்பாடு கத்திக் குத்தில் முடிவடைந்ததாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஜெசிந்தன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.