ரயில் தடம்புரண்டதால் மலையக ரயில் சேவை பாதிப்பு!!!

கொழும்பு – பதுளை பிரதான ரயில் போக்குவரத்துப் பாதையில் இடம்பெற்ற ரயில் தடம்புரள்வால் ரயில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.


வட்டகொடை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ரயில் தடம்புரண்ட நிலையில் இன்று (சனிக்கிழமை) மாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட ரயில் தடம் புரள்வு காரணமாக மலையக ரயில் சேவைகள் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் பாதிப்படைந்தன.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை ரயில் நிலையம் வரை பயணிகளை ஏற்றிச்சென்ற உடரட மெனிக்கே ரயிலே இவ்வாறு தடம் புரண்ட நிலையில் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

இதையடுத்து, மற்றுமொரு ரயில் மூலம் சுமார் இரண்டு மணித்தியாலயங்களின் பின்னர் பயணிகள் தமது பயணங்களை மேற்கொண்டனர்.

எனினும் ரயில் பாதையை சீர்செய்ய நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும், அதன்பின்னர் மலையக ரயில் சேவைகள் வழமைப்போல் செயற்படும் எனவும் ரயில்வே நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.