அருவக்காட்டுக்கு குப்பைகளை கொண்டுசெல்ல விசேட திட்டம்!!

கொழும்பிலிருந்து அருவக்காடு வரை குப்பைகளைக் கொண்டு செல்வதற்கு விசேட திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளது.


அதற்கமைய மாநகர அமைச்சினால் அருவக்காடு வரை குப்பைகளைக் கொண்டு செல்வதற்கு 4 ரயில் எஞ்சின்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேலும் 4 ரயில்களும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ரயில்கள், மலையக மார்க்க சேவைகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன. இதனைத் தவிர மேலும் 4 ரயில் பெட்டிகள் அடுத்த மாதமளவில் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.