வரலாற்று சிறப்பிடங்கள் அழிந்துவரும் அவலம்!!

யாழ்ப்பாணம் நல்லூர் மந்திரிமனை பராமரிப்போ, கண்காணிப்போ இன்றி காதலர்கள் ஓய்வுக்கூடமாக மாறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.


தமிழ் வரலாற்றில் எஞ்சியுள்ள ஓரிரண்டு தொல்லியல் சின்னங்களில், யாழ்ப்பாணம் முத்திரைச்சந்தியில் சங்கிலியன் தோப்பு, யமுனா ஏரி மற்றும் மந்திரி மனை என்பன முக்கியமானவை.

எனினும், குறித்த வரலாற்று சின்னங்கள் முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன.

இதில் சங்கிலியன் தோப்பு, யமுனா ஏரி என்பன தொல்பொருள் திணைக்களம் மற்றும் யாழ். மாநகரசபையினால் அடையாளப்படுத்தி பெயர் பலகை நிறுவப்பட்டுள்ளது.

எனினும் மந்திரிமனையில் எந்தவொரு அடையாளப்படுத்தல், பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.

ஏற்கனவே தொல்பொருள் சின்னம் என அடையாளப்படுத்தப்பட்ட பெயர் பலகை ஒன்று அங்கு நிறுவப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த பெயர்பலகையும் வர்ணப் பூச்சினால் மறைக்கப்பட்டுள்ளது.

தற்போது பராமரிப்பின்றி காணப்படும் மந்திரிமனை காதலர்கள் ஒன்று கூடுமிடமாக மாறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் தொல்லியல் சின்னமான அந்த கட்டட சுவர்களில் காதலர்களின் பெயர்கள் எழுதப்பட்டு வருகின்றதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதுமட்டும் அல்லாமல் மது அருந்துபவர்கள் மற்றும் சமூகப் புறழ்வுகளில் ஈடுபடுபவர்களின் கூடாரமாகவும் மந்திரிமனை மாறி வருவதாக அருகில் வசிக்கும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துடன் , இது தொடர்பில் உரியவர்கள் கவனமெடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.