ஈரானுக்கு வந்தது தளபதி காசிம் சோலெய்மனியின் உடல்!!

ஈராக்கில் அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் புரட்சிகர காவல் படைப் பிரிவின் தலைவரான ஜெனரல் காசிம் சோலெய்மனியின் உடல் ஈரானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஈரானின் தென்மேற்கு நகரமான அஹ்வாஸுக்கு அவரது உடல் இன்று (ஞாயிறுக்கிழமை) கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறித்த செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. காசிம் சோலெய்மனியுடன் உயிரிழந்த ஏனைய அதிகாரிகளின் உடல்களும் ஈரானுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

காசிம் சோலெய்மனி, ஈராக்கின் பக்தாத் விமான நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த வேளையில் அமெரிக்கப் படையினர் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

மேலும், ஈரான் ஆதரவுடன் செயற்பட்டு வந்த கிளர்ச்சிப்படை பாப்புலர் மொபைலைசேஷன் ஃபோர்ஸ் (பி.எம்.எப்.) படையின் துணைத் தளபதி அபு மஹதி அல் முஹன்திஸ் உட்பட 7 பேர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இதேவேளை, நேற்று பக்தாத்தில் இடம்பெற்ற காசிம் சோலெய்மனி மற்றும் அல் முஹன்திஸின் இறுதி ஊர்வலத்தின் போது, ஈராக் பிரதமர் உட்பட ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டிருந்ததுடன், அமெரிக்காவுக்கு எதிராக பல கோஷங்களும் எழுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.