அமெரிக்க படையினர் மீது சோமாலிய பயங்கரவாதக் குழு தாக்குதல்!

கென்யாவில் நிலைக் கொண்டுள்ள அமெரிக்க கூட்டு இராணுவ படைத் தளத்தின் மீது சோமாலியாவைச் சேர்ந்த அல்-ஷாபாப் பயங்கரவாதக் குழு தாக்குதல் நடத்தியுள்ளது.


கடலோரப் பகுதியான லாமுவில் உள்ள மாண்டா விமான தளத்தின் மீதே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை சுமார் 5.30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், இத்தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அமெரிக்க, கென்ய இராணுவத்தினரின் பதிலடியில் 4 பயங்கரவாதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கென்ய இராணுவ செய்தித் தொடர்பாளர் பால் ஜுகுனா தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் இரு நாட்டு இராணுவ வீரர்கள் தரப்பில் எவரும் உயிரிழந்தார்களா என்பது தொடர்பாக உடனடித் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதனிடையே, இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 5 பேரை கென்ய பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சோமாலியாவுக்கு கென்யா படைகளை அனுப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்-ஷாபாப் பயங்கரவாதக் குழு தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.